மக்களே உஷார்! மர்ம காய்ச்சலால் பரபரப்பு! 8ஆம் வகுப்பு மாணவி பலி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் மர்ம காய்ச்சலுக்கு எட்டாம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை அடுத்த மேட்டுப்பாளையம் சங்கராபுரம் விபிசிங் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் உள்ளார். அவர் பெயர் சுபிக்ஷா அருகில் உள்ள தனியார் பள்ளி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்  சுபிஷா வழக்கம்போல் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோர்கள் காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை கொடுத்துள்ளனர்.

மறுநாள் காய்ச்சல் அதிகரித்து காணப்பட்டுள்ளது. மதியம் மூன்று மணி முதல் தொடர் வாந்தி எடுத்துள்ளார். மாலையில் அங்குள்ள தனியாருக்கு கிளினிக் மருத்துவரிடம் சுபிஷாவை பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த மருத்துவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்துள்ளார். அதன்படி 10 மணிக்கு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். சிறுமிக்கு ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக கூறி மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

இசிசியும்  சீராக இல்லாததால் மேல் சிகிச்சை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சுபிஷா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8th class student died of mysterious fever in Puducherry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->