ஜம்மு -வில் பயங்கரவாதிகள் நடமாட்டம்..?? மீண்டும் அரங்கேறிய துப்பாக்கிச்சூடு ..!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் செக்டரில் சேடா சோஹல் என்னும் கிராமத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து வெளியான தகவலில், "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தின் ஹிராநகர் செக்டாரில் உள்ள சேடா சோஹல் என்ற கிராமத்தில் நேற்று இரவு 7.45 மணி அளவில் சில மர்ம நபர்கள் நடமாட்டம் காணப்பட்டு உள்ளது.

பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் சேடா சோஹல் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதையடுத்து துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்ட மக்கள் கூச்சலிட்டதால், அந்த மர்ம நபர்கள் உடனே அங்கிருந்த காட்டிற்குள் தப்பி ஓடி விட்டனர்.

தகவலறிந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து சென்று அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கூடா என்ற பஞ்சாயத்து பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

எனவே இது பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் நுழைவதற்கான முயற்சியாக இருக்கலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜூன் 9ம் தேதி ஜம்முவில் கோவிலுக்குச் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 வரை வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Again Gun Fire Enacted In Jammu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->