டெல்லியில் மிக மோசமடைந்த காற்றின் தரம்!...தரக் குறியீட்டில் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு 356 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் தெரிவிக்கிறது.

மேலும், டெல்லியில் இன்று காலை காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதிகள் புகை மூட்டமாக காணப்பட்டது.  இதன் காரண்மாக, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட  பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.

டெல்லியில் உள்ள பவானா, முண்ட்கா, வஜிர்பூர் மற்றும் துவாரகா ஆகிய நான்கு பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் கடுமையான பிரிவில் பாதிவாகியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்று தரக் குறியீட்டில்  0 முதல் 50 வரை இருந்தால் காற்று தரத்துடன் உள்ளது என்றும்,  51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் இருக்கும்.

இதே போல், 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம் என்றும்,  201 முதல் 300 வரை இருந்தால் மோசம் என்றும், 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசம் மற்றும்  401 முதல் 500 வரை இருந்தால் மிகவும் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Air quality has worsened in delhi shocking information in the quality index


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->