ஆந்திராவில் அபார வெற்றி! கொண்டாட்டத்தில் தொண்டர்கள் - பிரதமர் மோடி வாழ்த்து!
Andhra Pradesh Assembly Election 2024 TDP Leading
நடந்து முடிந்த மக்களவை தேர்தலோடு, ஆந்திரா மாநிலத்திற்கும் சட்டமன்ற பொது தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 15 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 133 இடங்களில் முன்னிலை வகித்து, ஆட்சி அமைக்க ஆட்சி அமைப்பது உறுதி ஆகி உள்ளது.
மேலும் தெலுங்கு தேசத்துடன் கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சி 20 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி ஏழு தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், இந்த தேர்தலில் தோல்வி அடைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில், ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
English Summary
Andhra Pradesh Assembly Election 2024 TDP Leading