ஆந்திராவை கைப்பற்றும் தெலுங்கு தேசம்! ஜெகன் ஆட்சி முடிவுக்கு வருகிறது!
andhra pradesh assembly elections 2024
நாடு முழுவதும் மக்களவைப் பொதுத்தேர்தல் நடந்து முடிந்து, இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்றது.
இதில் அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் தேர்தல் முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான அறிவிப்பின்படி, மொத்தமுள்ள 175 தொகுதி சட்டமன்ற தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 116 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
தற்போது ஆளுங்கட்சியாக உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 22 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இந்த முன்னிலை நிலவரப்படி ஆளுங்கட்சியாக உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மேலும் பாஜக ஆறு தொகுதிகளிலும், ஜனசேனா பார்ட்டி 15 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.
English Summary
andhra pradesh assembly elections 2024