ஆந்திராவில் சோகம்... 2 லாரிகள் மோதி கோர விபத்து: உடல் நசங்கி உயிரிழந்த மீனவர்கள்.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து மீனவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி சீதன பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்பு சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரியை முந்த முயற்சித்துள்ளது. 

அப்போது திடீரென கண்டெய்னர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மீனவர்களை ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இவற்றில் ஐந்து மீனவர்கள் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை வீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் ஒருவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. மற்ற ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சிகிச்சை பெறுவோரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி அதிகரிக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இரண்டு முதல் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிஅடைந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Pradesh trucks collision accident


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->