சரியாக படிக்கல என்று மகன்களை கொலை செய்த தந்தை! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!
AP Dad kill sons for education low
ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான வி. சந்திர கிஷோர், ஓஎன்ஜிசியில் பணியாற்றி வந்தவர்.
அவரது மகன்கள் கல்வியில் மோசமான நிலைமையில் இருந்ததாகவும், இதனால் அவருக்கு கடுமையான மனஅழுத்தம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து கவலையடைந்த கிஷோர், வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனது இரு மகன்களையும் தண்ணீர் நிறைந்த பக்கெட்டில் மூழ்கடித்துக் கொன்றார். பின்னர், தன்னையும் உயிரிழக்கச் செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் குறித்து அவரது மனைவி ராணி காவல்துறைக்கு தகவல் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்தில் கிஷோர் எழுதி வைத்திருந்த கடிதம் கண்டெடுக்கப்பட்டு, தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் இந்த சம்பவத்திற்கான காரணங்களை மேலதிகமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த பரிதாப சம்பவம் சமூகத்தில் கல்வி குறித்த உளவியல் அழுத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு தேவை என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.
English Summary
AP Dad kill sons for education low