இதனை முடிவுக்குக் கொண்டுவர... வாக்களியுங்கள் - கேஜரிவால் வேண்டுகோள்.!
Arvind Kejriwal appealed voters right vote
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவைத் தோ்தலின் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
இது மாபெரும் ஜனநாயகம் திருவிழா நாடு முழுவதும் இன்று கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் பாதுகாக்க அனைவரும் தங்களது வாக்குரிமைகளை பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும்.
நீங்களும் வாக்களியுங்கள். உங்கள் அண்டை வீட்டாரையும் வாக்களிக்க அழைத்துச் செல்லுங்கள். சர்வாதிகாரம் தோற்றுவிடும் ஜனநாயகம் வெல்லும் குறிப்பிட்டுள்ளார்.
கலால் கொள்கையுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு கெஜ்ரிவால் இடைக்கால ஜாமினில் வெளிவந்துள்ளார். இவரது இடைக்கால ஜாமின் நாளை முடிவடைய உள்ளதால் மீண்டும் அவர் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Arvind Kejriwal appealed voters right vote