கொடூரம்! கணவனுடன் சண்டை! 4 குழந்தைகளை கிணற்றில் வீசிய கொடூர தாய்! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் நான்கு குழந்தைகளை தாய் கிணற்றில் வீசி அவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் மான்ட்சார் கரூர் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது கேடா கிராமம் இங்கு சுகுணா பாய் என்ற பெண் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அவர் அதேபகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை சுகுணாவுக்கு அவரது கணவர் ரோட்டு சிங்கிற்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சுகுணா தனது 4 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு பின்புறம் உள்ள பள்ளியில் வளாகத்தில் இரவு தஞ்சம் அடைந்து இரவு முழுவதும் அங்கையே இருந்தாக கூறப்படுகிறது.

நேற்று காலை திடீரென அருகில் உள்ள கிணற்றில் தனது நான்கு குழந்தைகளையும் வீசிவிட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முன்றார் இதனை கவனித்த சிலர் கிணற்றில் குதித்து சுகுணாவை காப்பாற்றினர். ஆனால் அவரது குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை.

நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு நான்கு குழந்தைகளின் உடலைகளை மீட்டனர். விசாரணையில் குழந்தைகளின் பெயர்கள் அரவிந்த், அனுஷா, பிட்டு, கார்த்திக் என்று தெரியவந்துள்ளது. குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attempted suicide by throwing four children into a mother well in Madhya Pradesh


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->