பெட்ரோல், டீசலை தொடர்ந்து ''குடிநீர்'': வெளியான அதிர்ச்சி தகவல்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்ற ஒரு ஆண்டுக்குள் 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 

இந்த திட்டங்களால் கர்நாடகா அரசு நிதிச் சுமையில் சிக்கி தவிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது. இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 3 உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பெங்களூருவில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த கர்நாடகா அரசும் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியமும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பெங்களூருவில் 2014ஆம் ஆண்டு குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தண்ணீர் கட்டணத்தை உயர்த்த பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. 

அதாவது காவிரி நீர், சுத்திகரிக்கப்பட்ட நீர், பிற தேவைக்கு பயன்படுத்தும் நீர் உள்ளிட்ட அனைத்து வகையான நீர் கட்டணத்தையும் 40% உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த குடிநீர் கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்டு கர்நாடகா அரசுக்கு பெங்களூர் குடிநீர் வாரியம் பரிந்துரை செய்துள்ளது. அரசு உத்தரவிட்டதும் கடன உயர்வு அமலுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bengaluru water price increase plan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->