பட்டத்தை வாங்கி என்ன பண்ண போறீங்க.. பஞ்சர் கடை வைங்க - சர்சையைக் கிளப்பிய பாஜக எம்.எல்.ஏ.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உயா்கல்வியை மேம்படுத்தும் வகையில் "பிரதமா் சிறப்புக் கல்லூரி" என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மத்தியபிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் இந்த புதிய கல்லூரியின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், அந்த தொகுதியின் பாஜக எம் எல் ஏ பன்னாலால் ஷக்யா பங்கேற்று பேசினார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது, "இங்கு பிரதமா் சிறப்புக் கல்லூரியைத் தொடங்கியுள்ளோம். மாணவா்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றை மட்டும் தெளிவாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கல்லூரியில் படித்து கிடைக்கும் பட்டத்தால் ஒன்றும் நடந்துவிட போவதில்லை. 

இதற்கு பதிலாக இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சா் பாா்க்கும் கடை வைத்தால் உங்கள் வாழ்க்கையை நடத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார். பாஜக எம்எல்ஏவின் இந்தக் கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாஜக எம் எல் ஏவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:- "முன்னதாக, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க பக்கோடா விற்க கூறினார் பிரதமர் மோடி. இப்போது அவரது எம் எல் ஏக்கள் கல்லூரி பட்டங்களை பயன் இல்லாதவை என்றும், பஞ்சர்கடை திறக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு சொல்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp mla pannalaal shakya speech degree no use


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->