அதிர்ச்சி தகவல்! இந்திய கிரிக்கெட் அணி வெற்றி ஊர்வலம்! 64 ரசிகர்களின் செல்போன் திருட்டு! - Seithipunal
Seithipunal


மும்பை : இந்திய கிரிக்கெட் அணி வெற்றி ஊர்வலத்தில் 64 ரசிகர்களின் செல்போன் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் என்ற இந்திய கிரிக்கெட் அணியின் பிரம்மாண்ட வெற்றி ஊர்வலம் கடந்து வியாழக்கிழமை மும்பை மெரின் டிரைவ் பகுதியில் நடந்தது. 

 மெரின் டிரைவ் பாயின்டிலிருந்து வான்கடே மைதானம் வரை வெற்றி ஊர்வலத்தை காண இலட்சக்கணக்கில்  ரசிகர்கள் திரண்டனர். இந்த ஊர்வலத்தை கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.

அப்போது கூட்டம் நெரிசல் காரணமாக சிலர் கையில் வைத்திருந்த செல்போன்களை தவறி கீழே விழுந்துள்ளன.அதனை எடுக்க முடியாமல் ரசிகர்கள் கூட்டநெரிசலில் சிக்கி அவதி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிலர் செல்போன்கள் தொலைந்ததாகவும் திருடப்பட்டு போனதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மெயின் டிரைவ் பகுதியில் இந்திய கிரிகெட் அணி வெற்றி ஊர்வலத்தில் பங்கேற்ற கிரிக்கெட் ரசிகர்கள் 64 பேர் தங்கள் செல்போனை இழந்து உள்ளனர். இதில் 60 பேர் மெரின் போலீசில் புகார் அளித்துள்ளனர். 4 பேர் தங்களது புகாரை ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cell phones stolen from 64 fans during Indian cricket team victory parade


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->