முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு ரத்து.. மத்திய அரசு விளக்கம்..! - Seithipunal
Seithipunal



இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நீட் தேர்வுகள் தேசிய தேர்வு முகமையால் நடத்தப் படுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானது, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது என்று பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இதையடுத்து இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசும் நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் மருத்துவ முதுநிலை படிப்பிற்கான  நீட் தேர்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், நேற்று மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தேர்வு ஒத்தி வைக்கப் படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் , " முன்னதாக நடந்த சில போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளதால் முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு ரத்து செய்யப் படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப் படும்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Explained About UG NEET Exams Cancellation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->