கூட்டு பாலியல் வன்கொடுமை: 18 வயது பெண் பரபரப்பு புகார்!  - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான், ஆல்வார் பகுதியில் 18 வயது பெண்ணை ஒரு ஆண்டுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் நேற்று, மூன்று காவலர்கள் மீது புகார் அளித்ததாக காவல் சிறப்பு கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

மேலும், புகார் அளித்தால் பெண்ணின் சகோதரனை பொய் வழக்கில் கைது செய்வதாக காவலர்கள் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். 

குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்முறை மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அந்த பெண் அளித்துள்ள புகாரில் மூன்று காவலர்களும் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெண் முதலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது அவருக்கு 18 வயதுக்கு கீழ் என்பதால் இந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Collective Sexualassault Case against 3 police


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->