கடந்த 38 நாட்களில் 96 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்! சீரழிந்து போன சட்டம் ஒழுங்கு - பாஜக கண்டனம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 38 நாட்களில் பெண்களுக்கெதிரான, குழந்தைகளுக்கெதிரான பாலியல் 96 வன்கொடுமை சம்பவங்கள் நடந்து உள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளதாகவும் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இந்த வருட தொடக்கத்தில் இருந்து (2025) இன்று வரையிலான 38 நாட்களில் பெண்களுக்கெதிரான, குழந்தைகளுக்கெதிரான பாலியல் 96 வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இது சட்டம் ஒழுங்கு விவகாரம் மட்டுமல்ல, கலாச்சார சீர்கேட்டுக்கான ஆதாரமும் கூட. 

இதற்கு மிக முக்கிய காரணங்கள் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தவறிய அல்லது தெரியாத மாநில அரசின் நிர்வாக சீர்கேடு மற்றும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது போதையின் தாக்கம். 

‘மது வீட்டுக்கு, நாட்டுக்கு கேடு’ என்ற சொற்களை அகற்றி விட்டு, ‘மது தமிழ் மக்களை கொல்லும், தமிழ் நாட்டை அழிக்கும்’ என்ற வாசகத்தை பொருத்தி மக்களை கொல்லும், நாட்டை அழிக்கும் மதுவை விற்கும் அரசு திராவிட மாடல் திமுக அரசு என்று மார்தட்டிக் கொள்ளட்டும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Narayanan Condemn to DMK Govt Law and Order TN


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->