அட கடவுளே! கல்லூரி கழிவறையில் மாணவி செய்த செயல்! வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவி கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவறையில் குழந்தையை பெற்றுடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனிவாசபூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் கல்லூரியில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகிய மாணவி வராததால் மாணவியின் தோழிகள் கழிவறைக்கு சென்று பார்த்த போது மாணவி  மயங்கி கிடந்துள்ளார். அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையின் அழுகுரல் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததால் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கழிவறைக்கு வந்ததால் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவியையும் குழந்தையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தது.

கல்லூரிக்குச் சென்ற மாணவிக்கு குழந்தை பிறந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துமனைக்கு விரைந்து சென்றனர். மேலும் இது குறித்த தகவல் கிடைத்தும் மகளிர் போலீசார் குழந்தைகளை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

மாணவியிடம் கோலார் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி கொடுத்த தகவலின் அடிப்படையில் அனில் குமார் என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student gave birth in a toilet in the college campus


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->