அசாமை புரட்டி போட்ட ரேமல் புயல் - பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், 11 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்துள்ளன. இந்த வெள்ளத்தில் சிக்கி 3.5 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும், வீடுகளில் சிக்கித் தவித்த 30,000 பேரை மீட்புப்படையினர் மீட்டு, முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இதுவரைக்கும் புயல், மழை, வெள்ளம் போன்றவற்றில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் பெய்த கனமழையால் பராக் பள்ளத்தாக்கு, திமா ஹசோ பகுதிகளில் சாலை மற்றும் தண்டவாளங்கள் துண்டிக்கப்பட்டு வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அசாமை மேகாலயாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், ரேமல் புயல் காரணமாக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதாகவும், தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிகை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death troll increase in assam for floods affect


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->