டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்! - Seithipunal
Seithipunal


டெல்லியின் முக்கிய பகுதிகளான செங்கோட்டை மற்றும் ஜமா மசூதிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த எச்சரிக்கையை அடுத்து, பாதுகாப்பு படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுற்றுவட்டாரங்கள் முழுவதும் காலியாக்கப்பட்டு, பலத்த காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டது.

தொடர்ந்த சோதனையில் எந்த வெடிகுண்டு சாதனமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது ஒரு போலி மிரட்டல் அழைப்பு என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டறிய விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தொலைபேசி அழைப்பு எந்த எண் வழியாக வந்தது, யார் அதன் பின்னணியில் இருக்கலாம் என்பன குறித்து டெல்லி சிறப்பு பிரிவுகள் தகவல் சேகரித்து வருகின்றன.

பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi Red Fort bomb threat 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->