டெல்லி ரோகினி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு - இருவருக்கு காயம்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் இன்று காலை 9.40 மணி அளவில் வாயில் எண் 8-ன்  அருகில் சஞ்சீவ் சவுத்ரி மற்றும் ரிஷி சோப்ரா ஆகிய இரு வழக்கறிஞர்களுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறின் போது, நீதிமன்றத்தில் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த நாகாலந்து ஆயுதமேந்திய காவல்துறையின் கான்ஸ்டபிள் ஒருவர், துப்பாக்கி சூடு நடத்தி இந்த பிரச்சனையை கலைக்க முயன்றார். 

கான்ஸ்டபிள் துப்பாக்கியை தரையை நோக்கி சுட்ட போது, கான்கிரீட் கற்கள் எகிரி 2 பேர் மீது பட்டதில் இருவரும் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளதாவது,

"ரோகிணி நீதிமன்ற வாயிலுக்கு வெளியே ஒரு வழக்கறிஞருக்கும், பாதுகாவலர் க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இது தீவிரமடைந்து இந்த வாக்குவாதத்தில் மேலும் 2 வழக்கறிஞர்கள் இணைந்தனர். 

இந்த வாக்குவாதம் பெரிதாகி வன்முறையாக மாறியதால், கான்ஸ்டபிள் தரையை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்". என்று  வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi Rohini Court Gun Fire


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->