உ.பி-யில் அதிர்ச்சி: மாற்றுத்திறனாளி பெண் கட்டிலில் கட்டி போட்டு கொடூரமாக கற்பழித்து கொலை.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை கட்டிலில் கட்டி போட்டு கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் திருமணமான 28 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண். இவரது கணவர் கடந்த 8-ந்தேதி வேலைக்காக வெளியூர் சென்றுள்ளார். அப்பொழுது வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் மட்டும் தனியாக இருந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த முகமது முன்தியாஸ்(30) என்ற தொழிலாளி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

பின்பு மாற்றுத்திறனாளி பெண்ணை கட்டிலில் கட்டி போட்டு கொடூரமாக தாக்கி கற்பழித்துள்ளார். இதனால் அந்த பெண் வலியால் அலறிதுடித்து மயக்கம் போட்டுள்ளார். இதையடுத்து முகமது முன்தியாஸ் அங்கிருந்து தப்பிசென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாற்றுத்திறனாளி பெண் என் கணவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், முகமது முன்தியாசை கைது செய்தனர். ஆனால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாற்றத்திறனாளிப்பின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் ஏற்பட்டு, அதிக ரத்தப்போக்கு காரணமாக, அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Disabled woman brutally raped and murdered in uttar pradesh


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->