தமிழகத்தில் இந்துக்கள் மீது உளவியல் தாக்குதல் - பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


இந்துக்கள் அசைவ உணவுகளை தவிர்க்கும் புரட்டாசி மாதத்தில் அவர்களது நம்பிக்கையை கேலி செய்யும் விதமாகவும், மன உறுதியை களங்கப்படுத்தும் வகையிலும் உளவியல் தாக்குதல் நடைபெற்று வருவதாக, பாஜகவை சேர்ந்த வினோஜ் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், சமூக வலைதளங்கள் தொடங்கி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரையில் அனேக இடங்களில் அசைவ உணவுகள் குறித்த புதிய வீடியோ/ பழைய வீடியோ பகிர்வுகள் என்று தூள் கிளப்புகிறார்கள். 

உள்நோக்கம் எதுவும் இல்லாததை போல உணவை சிலாகித்து பேசுவதில் தங்களை சமார்த்தியசாலிகளாக காட்டிக் கொள்கிறார்கள்.

இத்தனை வன்மத்தை வெளிப்படுத்தி எதை சாதிக்க போகிறீர்கள்? மற்ற மதத்தினரும் கூட ஆண்டின் சில மாதங்களில் விரதம் இருக்கிறார்கள். அதற்கு மதிப்பளிப்பவர்கள் இந்துக்களை மட்டும் நோகடிக்க நினைப்பது ஏன்?

எல்லா இந்துக்களும் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் இல்லை என்பதுதான் எதிராளிகளின் பலம். நமக்கு விழிப்புணர்வு வந்துவிட்டால் இன்றைய புரட்டாசி சனிக்கிழமைக்கு விரத உணவுடன் வீடியோக்கள் வர கூடும்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Vinoj Selvam Say About Purattasi month Hindu


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->