7 மணிவரை கவனம் மக்களே! தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இடி - மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


இரவு ஏழு மணி வரை தமிழகத்தில் 27 மாவட்டங்களில், இடி - மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்வதற்கு உண்டான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் புதுச்சேரி பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Weather Report Rain Alert


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->