உத்தர பிரதேசம் :: 3.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்.!
Earthquake of magnitude 3 point 2 hits Uttar Pradesh
உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லியில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு 3.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 9.31 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது தரைப்பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் உத்திரபிரதேசத்தின் தலைநகர் லக்னோ மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் 5.2 ரிக்டர் அளவில் பூமிக்கு அடியில் 82 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake of magnitude 3 point 2 hits Uttar Pradesh