எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


ஹவுரா மாவட்டத்தில் செகந்தராபாத் - சலிமார் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஹவுரா மாவட்டத்தில் நல்புர் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த செகந்தராபாத்-சலிமார் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் ஒரு பார்சல் பெட்டி உள்பட நான்கு பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. இந்த விபத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே ரெயில்வே அதிகாரிகள் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

தடம்புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

express train four coaches derailed in west bengal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->