கேரளாவில் கொடூரம்: 5 வயது மகனை தாக்கி பிறப்புறுப்பில் சூடு வைத்த தந்தை.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் 5 வயது மகனை தந்தை கொடூரமாக தாக்கி பிறப்புறுப்பில் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டின் சுல்தான் பத்தேரி பகுதியை சேர்ந்தவர் உதயகிரி. இவருக்கு மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் இவரது மனைவி உடலில் காயங்களுடன் இருக்கும் 5 வயது மகனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதில் சிறுவனின் கழுத்து, கை, வயிறு, முதுகு பகுதிகளில் ரத்தக்கட்டும், பிறப்புறுப்பில் சூடு வைத்த காயமும் இருந்ததால், இதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த பெண்ணிடம் இதுகுறித்து கேட்டனர்.

அப்பொழுது அந்தப் பெண் மகன் சேட்டை செய்ததால், அவரது தந்தை வயரால் அடித்து துன்புறுத்தி, சூடு வைத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட மருத்துவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.

இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், 5 வயது மகனை கொடூரமாக தாக்கி பிறப்புறுப்பில் சூடு வைத்த தந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father beat his 5 year old son and burned his genitals in Kerala


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->