உ. பி || மருத்துவமனை வளாகத்தில் திடீர் தீ விபத்து - நோயாளிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பத் மாவட்டம் பதாவத் பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதைப்பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் பீதி அடைந்தனர். 

உடனே சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால், மற்ற தளங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதுடன், நோயாளிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "தேவையற்ற பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மூன்றாவது தளத்தில் தீப்பிடித்ததாகவும், 12 நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். 

மேலும் அவர் பேசுகையில், கழிவுப் பொருட்களை அகற்றும்படி 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், மருத்துவமனையின் இரண்டு தளங்களுக்கு மட்டுமே தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் உள்ளது என்றும், இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in uttar pradesh hospital


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->