தாயின் நண்பருடன் வீட்டிற்குச் சென்ற சிறுமி - நண்பருடன் சேர்ந்து கைவரிசையைக் காட்டிய சம்பவம்.!!
five peoples arrested for harassment in madhya pradesh
மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பதினான்கு வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் அந்த இளம்பெண் தன்னுடன் பணிபுரிந்து வரும் வாலிபர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் தனது மகளை ஏற்றிவிட்டு வீட்டில் இறக்கிவிட சொல்லி அனுப்பியுள்ளார்.
அதன் படி அந்த வாலிபரும் சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்த வாலிபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலமாக அழைப்பு விடுத்து வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து சிறுமியை மிரட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
five peoples arrested for harassment in madhya pradesh