கார்-லாரி நேருக்கு நேர் மோதல் - 5 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியில் இருந்து கார் ஒன்று பாலக்காடு-கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் அய்யப்பன்காவு அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples died for accident


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->