வனத்துறை அதிகாரி கழுத்து அறுத்து கொலை.! தெலுங்கானாவில் பரபரப்பு.!
Forest officer killed by slitting throat in Telangana
தெலுங்கானாவில் வனத்துறை அதிகாரி கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அபபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள குத்தி கோயா கோட்டா பகுதியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவர் வனத்துறை அலுவலராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வனப்பகுதியில் உள்ள மரங்களை சிலர் வெட்டி கொண்டு இருப்பதாக வனத்துறை அலுவலர் சீனிவாச ராவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சீனிவாச ராவ் சந்துரு கொண்டல வனப்பகுதிக்கு சென்று மரத்தை வெட்டிக் கொண்டு இருந்தவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சீனிவாசராவை மரம் வெட்டும் கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து அவரது உடலை வனப்பகுதியில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து வனத்துறை அலுவலர் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து கம்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாச ராவ் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Forest officer killed by slitting throat in Telangana