ரயிலை கவிழ்க்க சதியா? தண்டவாளத்தில் கிடந்த எரிவாயு சிலிண்டர்!
Goods Train LPS Cylinder
நாடு முழுவதும் நடந்த சில மாதங்களாக தொடர் ரயில் விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று காலை ஒரு சரக்கு ரயிலை கவிழ்க்க சதி நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரக்கு ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் எல்பிஜி சிலிண்டரை மர்ம நபர்கள் வைத்து சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இன்று காலை சுமார் 5 மணி அளவில் கான்பூரில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர் ஒன்று இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து உடனடியாக ரயிலை நிறுத்திய ரயில் ஓட்டுநர் இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிலிண்டரை கைப்பற்றி இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிலிண்டரில் எரிவாயு இல்லை என்றும் அது 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிவாயு சிலிண்டர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இது குறித்து ரயில்வே துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.