இந்து மத கோவில்களில் இருந்து திமுக அரசு வெளியேற வேண்டும் - மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி!
BJP Central Minister L Murugan Condemn to TNgovt
இந்து மத கோவில்களில் இருந்து திமுக அரசுஉடனடியாக வெளியேற வேண்டும் என்று, மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவிக்கையில், "சாதி. மதம் குறித்து திமுகவினர் பேசுவது சரி இல்லை.
தற்போது தமிழகத்தில் தலித்துகளுக்கு ஒரு சுடுகாடு, மற்றவர்களுக்கு ஒரு சுடுகாடு என்று, இரட்டை சுடுகாடு முறை இருக்கும்போது இவர்கள் சாதி மதம் பற்றி பேசலாமா?
பட்டிலென மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் முதலமைச்சர் முக ஸ்டாலினும், திமுக எம்பி கனிமொழியும் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், இந்த ஆய்வுக்கு பின்னர் அங்கு இருக்கும் அவலங்களை கண்டறிந்த பின்னர், சாதி, மதம் குறித்து அவர்கள் பேசட்டும்.
இப்போது திமுக சாதி மதம் குறித்து பேசுவது நியாயமற்றது. இந்து மத கோவில்களில் அரசுக்கு என்ன வேலை? அங்கு என்ன இவர்களுக்கு வேலை?
இந்து கோயில்களை விட்டு தமிழக அரசு உடனே வெளியேற வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. நாட்டில் உள்ள கோவில்களில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய சனாதன தர்ம ரக்ஷண வாரியம் அமைக்கும் நேரம் வந்துவிட்டது என்று நாங்களும் எண்ணுகிறோம்" என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
English Summary
BJP Central Minister L Murugan Condemn to TNgovt