ஐஸ் கிரீமிற்குள் கை விரல்.. திக் திக் சம்பவம்..!! எங்கு நடந்தது தெரியுமா? - Seithipunal
Seithipunal



இந்தியாவில் ஐஸ் கிரீமிற்குள் துண்டிக்கப்பட்ட மனித கை விரல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உல்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி இது தான். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மலாட் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் ஐஸ் க்ரீம் ஆர்டர் செய்துள்ளார்.

அந்த பெண் தேர்வு செய்தது யுமோ பிராண்ட் ஐஸ் க்ரீம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஐஸ் க்ரீமின் வருகைக்காக ஆர்டர் செய்து விட்டு காத்திருந்த பெண்ணுக்கு சிறிது நேரத்தில் ஐஸ் க்ரீம் டெலிவரி செய்யப்பட்டு உள்ளது. 

இதையடுத்து அப்பெண்ணும் கோடை வெயிலின் தாக்கத்தில் சிறிது ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேகமாக ஐஸ் க்ரீமை சுவைக்க தொடங்கினார். மெய்மறந்து ஐஸ் க்ரீமை சுவைத்துக் கொண்டிருந்தவரின் நாக்கில் ஏதோ தட்டுப்படவே, அவர் அது என்னவென்று எடுத்து பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளார்.

அவர் நாக்கில் தட்டுப்பட்டது துண்டிக்கப்பட்ட மனித கை விரல். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக அந்த ஐஸ் க்ரீமை தனது கைபேசியில் படம் எடுத்துக்கொண்டு, மலாட் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்றுக்கொண்ட மலாட் காவல்துறையினர், ஐஸ் க்ரீமில் இருந்த விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த ஐஸ் க்ரீம் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து, அந்த பெண் சுவைத்த ஐஸ் க்ரீமையும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். 

இந்த சம்பவம் அங்கு பீதியை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Human Finger Found in Ice Cream


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->