சபரிமலைக்கு வரும் சிறுவர், சிறுமிகளுக்கு அடையாள அட்டை - கேரள காவல்துறை அதிரடி.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்படி வரும் பக்தர்களுக்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

அந்த வகையில், சபரிமலைக்கு வரும் 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு அடையாள பட்டையை கேரள காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து கேரள காவல்துறை தெரிவித்துள்ளதாவது:

"சபரிமலை சீசன் துவங்கியுள்ளது. ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு அடையாள பட்டைகள் ஏற்பாடு செய்துள்ளோம். 10 வயதுக்குள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லும் போது வழங்கப்படும்.

இந்த சிறப்பு அடையாள பட்டையில், குழந்தைகளுடன் வரும் பெற்றோர் அல்லது பெரியவர்களின் பெயரும் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் முக்கிய நோக்கம், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்ட நேரத்தில், விரைவாக அனுப்பவும், ஒருவேளை காணாமல் போகும் சூழ்நிலையில், அவரவர் பெற்றோர்கள், காப்பாளர்களுடன் அனுப்புவதற்கு எளிதாக இருக்கும்.

பெற்றோர் தரிசனம் முடிந்து பாதுகாப்பாக, திரும்ப வரும் வரையில் யாரும் இந்த சிறப்பு அடையாள பட்டையை கழற்றிவிட வேண்டாம் என் கேட்டுக்கொள்கிறோம்" என்றுத் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

identify tag to childrens in sabarimalai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->