T 20 உலகக் கோப்பை வெற்றி: மகாராஷ்டிரா சட்டசபைக்கு அழைக்கப் பட்ட இந்திய வீரர்கள்..!! - Seithipunal
Seithipunal



இந்திய அணி பார்படாஸில் நடந்த T 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்று கோப்பையுடன் இன்று காலை தாயகம் திரும்பியது. இன்று காலை டெல்லி விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வந்த இந்திய அணியினர், அங்கிருந்து ஹோட்டலுக்கு செல்லும் வழி முழுவதும் ரசிகர்களால் உற்சாகமாக வரவேற்கப் பட்டனர். 

இதையடுத்து இன்று காலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய அணியினர், அதையடுத்து பிரதமரின் இல்லத்தில் நடந்த சிறப்பு விருந்தில் கலந்து கொண்டு, பிரதமர் மோடியுடன் காலை விருந்து உண்டனர். 

இதையடுத்து டெல்லியில் இருந்து மும்பை செல்லவுள்ள இந்திய அணியினர் அங்கு மாலை 5 மணிக்கு மும்பை மரைன் ட்ரைவில் இருந்து வான்கடே மைதானம் வரை திறந்தவெளி பேருந்தில் ஊர்வலம் செல்லவுள்ளனர். இதையடுத்து வான்கடே மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ள உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியினருக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வான்கடே வரும் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரோஹித் ஷர்மா, சூரியகுமார் யாதவ், ஷிவம் துபே, யசஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு மகாராஷ்டிர சட்டசபைக்கும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்திக்கவும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Cricket Players Who Win World Cup T20 Called to Maharashtra Assembly


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->