ஜாஃபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் மே 6ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில், கடந்த மார்ச் 9ஆம் தேதி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார் அத்துடன் அவரது கூட்டாளிகள் 5 பேர் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் 5 பேரின் நீதிமன்ற காவலை மே 6 வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் போதை பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரணை செய்தது. 

விசாரணையின் முடிவில் ஜாபர் சாதிக்கு உள்ளிட்ட ஐந்து பேரிடமும் மூன்று நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

JaffarSadiq judicial custody extended until may6


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->