ஜம்மு | பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து! 21 பேர் உயிரிழப்பு! மீட்பு பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர், பூஞ்ச் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தர பிரதேசம் ஹத்ராஸில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தாண்டா மோர் என்ற பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டு வருகின்றனர். 

இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu bus accident 21 killed


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->