கேரளாவில் வெளுத்துவாங்கும் கனமழை... 3 மாவட்டங்களுக்கு ''ரெட் அலர்ட்''!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் கடந்த மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கன மழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான புயல் வலுப்பெற்றதன் காரணமாக கேரள மாநிலத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கனமழை வருகின்ற 26 ஆம் தேதி வரை நீட்டிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 204 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் அதிக அலைகள் என வாய்ப்பு உள்ளதால் கடலோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala heavy rain red alert


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->