மத்தியபிரதேச மந்திரியின் உதவியாளர் சுட்டு படுகொலை! குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தின் பா.ஜ.க அரசியல் மந்திரியாக செயல்படுபவர் கைலாஷ் விஜய்வர்கியா. இவரது உதவியாளர் மோனு கல்யாணி, இந்தூர் நகர் பாஜக இளைஞரணி துணை தலைவராக இருந்தார். 

இந்நிலையில் இந்த ஊரில் நடைபெற்ற பா.ஜ.க கூட்டம் தொடர்பான போஸ்டர்களை இன்று அதிகாலை மோனு கல்யாணி தனது ஆதரவாளர்களுடன் ஒட்டிக் கொண்டிருந்தார். 

அப்போது இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த இரண்டு பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மோனு கல்யாணி நோக்கி சரமாரியாக சுட்டதில் படுகாயம் அடைந்த மோனு கல்யாணியை ஆதரவாளர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

ஆனால் மோனு கல்யாணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரியவந்தது. மேலும் மோனு கல்யாணியை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த பியூஷ், அர்ஜுன் என்பது தெரிய வந்துள்ளது. 

இதனை அடுத்து தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மத்திய பிரதேச மந்திரியின் உதவியாளர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh minister Kailash Vijayvargiya aide shot dead


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->