திருநெல்வேலி : கோவில் திருவிழாவில் மின்சாரம் பயந்து வாலிபர் பலி.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி : கோவில் திருவிழாவில் மின்சாரம் பயந்து வாலிபர் பலி.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி அருகே பத்தமடை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவர் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் பத்தமடை பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் நேற்று திருவிழா நடைபெற்றது. 

அந்த திருவிழாவிற்கு ஒலி, ஒளி அமைக்கும் ஆர்டரை ஷாஜகான் எடுத்து, அதன் படி கோயில் மற்றும் கோயில் வளாகத்தைச் சுற்றிலும் ஒலி, ஒளி அலங்காரம் அமைத்துள்ளார்.

இதையடுத்து கோவில் திருவிழா அனைத்தும் முடிந்த நிலையில் ஷாஜகான் இன்று காலை கோவிலில் அமைத்திருந்த ஒலி, ஒளி அலங்காரங்களை பிரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது, ஷாஜகான் மீது திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதன் பின்னர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man died for electric shock attack in tirunelveli


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->