குஜராத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவான காற்று வீசியுள்ளது - அமைச்சர் ராஜ்நாத் சிங்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள 182 தொகுதிக்ளிக் கொண்ட சட்டசபைக்கு இந்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகள் போட்டியிட்டன.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. ஆரம்பத்திலிருந்தே பாஜக முன்னிலை பெற்று வந்த நிலையில் 182 தொகுதிகளில் பாஜக 149 தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜகவின் வெற்றி உறுதியானது. இதைத் தொடர்ந்து 7-வது முறையாக குஜராத் மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துள்ளது. 

இந்த குஜராத் தேர்தல் வெற்றி குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததாவது, "குஜராத் மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவான காற்று வீசியுள்ளது.

அதன் காரணமாகவே நாங்கள் தற்போது புதிய சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி மீது குஜராத் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister rajnath singh speach for gujart election reult


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->