நேருக்கு நேர் மோதிய லாரி - கார் : குழந்தை உள்பட ஒன்பது பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கோவாவிலிருந்து மும்பை செல்லும் நெடுஞ்சாலையில் அதிகாலை 5 மணியளவில் லாரி மீது கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

கோவாவில் இருந்து மும்பையை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த கார் ரத்னகிரி மாவட்டம் குஹாகர் பகுதி அருகே வந்த போது லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த ஒரு குழந்தை மற்றும் மூன்று பெண்கள் உள்பட மொத்தம் ஒன்பது பேர் பலியாகினர். 

இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் அதிவேகமாக வந்து லாரி எதிரே வருவதை கவனிக்காமல் இந்த விபத்து நடைபெற்றதா? அல்லது தூக்க கலக்கத்தில் இந்த விபத்து நடைபெற்றதா? என்று பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near mumbai nine peoples died for car lorry accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->