மும்பை : ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இரண்டு பேர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை வழியாக சயான் கிழக்கு பகுதிக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக பாந்திரா யூனிட் போதைதடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இந்த தகவலின் படி, போலீசார் அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது இரண்டு பேர் சந்தேகப்படும் வகையில் நடமாடியதை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து சோதனை நடத்தினர். அதில், ரூ.1 கோடி மதிப்புள்ள 500 கிராம் மெபட்ரோன் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து போதைப்பொருள் வைத்திருந்த இரண்டு பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில்  ஒருவர் மீது கடந்த 2006-ம் ஆண்டு முதல் மொத்தம் 18 வழக்குகள் இருப்பதும், கடந்த 2021-ம் ஆண்டில் அவர் மும்பைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து போதை தடுப்பு பிரிவு போலீசார் போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர் என்பது தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near mumbai two peoples arrested for drugs kidnap


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->