உ.பி - வீட்டில் புகுந்து 2 மாதக் குழந்தையை குரங்கு தூக்கிச் சென்றதால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டா மாவட்டம் சபர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்வேஷ்வர் சர்மா. இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்த குழந்தை கடந்த செவ்வாய் கிழமையன்று தொட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தது. 

அப்போது அந்த வழியே வந்த குரங்குகள் கூட்டத்தில், ஒரு குரங்கு வீட்டுக்குள் நுழைந்து அந்த குழந்தையை இழுத்து சென்றது. இதில் அந்த குழந்தை வலியில் கதறி அழுதுள்ளது. 

இந்த அழுகை சத்தம் கேட்டு விஷ்வேஷ்வர் மற்றும் குடும்பத்தினர் ஓடி வருவதற்குள் குரங்கு குழந்தையை மேற்கூரை பகுதிக்கு கொண்டு சென்று விட்டது. இவர்களும் அதன் பின்னே சென்று, குழந்தையை பாதுகாக்கும் முயற்சியாக குரங்கை பயமுறுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துள்ளனர். 

ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து அந்த குரங்கு குழந்தையை கூரையிலிருந்து கீழே வீசி எறிந்துள்ளது. இதில் அந்த குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விஷ்வேஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு அருகிலுள்ள குடும்ப நல மையத்திற்கு சென்றுள்ளனர். 

அங்கு அந்த குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டது என்று தெரிவித்துள்ளனர். இதேபோன்று, குரங்குகள் கூட்டாக மக்களை தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

இது தொடர்பாக வன துறையினருக்கு அடிக்கடி தகவல் தெரிவித்தும் அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttara pradesh two month baby died for monkey picked


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->