வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றாலும் விடுமுறை எடுக்கலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்ற பெண் ஒருவருக்கு அவர் பணியாற்றிய இடத்தில் மகப்பேறு விடுமுறை வழங்கப்படாததால், அந்த பெண் தனக்கு மகப்பேறு விடுமுறை வழங்க உத்தரவிடக்கோரி ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி சஞ்சீப் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, "ஒடிசா சேவைக் குறியீடு விதி 194-ன் கீழ், ஒரு பெண் ஊழியர் 180 நாட்கள் மகப்பேறு விடுமுறை பெற உரிமை உண்டு. ஒரு வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்கும் பெண் ஊழியர்களுக்கும் இத்தகைய சலுகை வழங்கப்படுகிறது. 

ஆனால், 'வாடகைத் தாய்' மூலம் தாய்மை அடையும் பெண்களுக்கு இதுபோன்ற சலுகைகள் இல்லை" என்று தெரிவித்தார். மேலும் ராஜஸ்தான் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகள் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டிய நீதிபதி, "வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்பட வேண்டும். 

அவர்களுக்கு சமமான சிகிச்சை மற்றும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு குழந்தையின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு தாயின் பராமரிப்பு மிகவும் முக்கியமானது.

ஆகவே மனுதாரருக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்குவதற்கான சலுகைகளை உருவாக்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

odisha high court order leave to baby born surrogate mother


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->