குஜராத் || செருப்பை வெளியில் விட சொன்ன மருத்துவருக்கு அடி, உதை - குஜராத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் பவ்நகர் பகுதியில் சிஹோர் என்ற இடத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, அவசர சிகிச்சை பிரிவில் பெண் ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், அவரை பார்ப்பதற்காக வந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் செருப்புகளை அணிந்தபடி அறையின் உள்ளே சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த மருத்துவர், அவர்களிடம் செருப்புகளை வெளியே கழற்றி விட்டு, உள்ளே வருமாறு தெரிவித்துள்ளார்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால், பெண்ணின் உறவினர்கள் ஆத்திரத்தில் மருத்துவரை கீழே தள்ளி, அடித்து, மிதித்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் மற்றும் அங்கிருந்த செவிலியர் அவர்களை தடுக்க சென்றனர்.

பின்னர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மருத்துவரைத் தாக்கியதாக மூன்று பேரை பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

patient relatives hit doctor in gujarat for remove cheppals


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->