வெற்றியை தொடர்ந்து... இன்று வாரணாசி விரையும் பிரதமா் மோடி.!  - Seithipunal
Seithipunal


நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி முதல் முறையாக தனது வாரணாசி தொகுதிக்கு இன்று செல்ல உள்ளார்.

அங்கு நடைபெற உள்ள விவசாயிகள் மாநாட்டின் கலந்து கொள்ளும் பிரதமர், விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் 17வது தவணையாக ரூ.  20000 கோடி விடுவிக்க உள்ளார். 

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைந்துள்ளது. 

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி உத்திரபிரதேசம், வாரணாசி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று கடந்த 9 ஆம் தேதி பிரதமராக பதவியேற்றார். 

இந்நிலையில் தனது தகுதியான வாரணாசிக்கு இன்று செல்ல உள்ள பிரதமர் 'வேளாண் தோழிகள்' திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 30 ஆயிரம் பெண்களுக்கு சான்றிதழ் வழங்க உள்ளார். 

தசாசுவமேத படித்துறையில் கங்கை ஆரத்தியில் பங்கேற்கும் பிரதமர் காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசிக்கு வருவதாக பா.ஜ.க மாவட்ட ஊடக பிரிவு பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi visit Varanasi today


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->