கொடூரம்! தாய்மாமனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மருமகனுக்கு வலை! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தில் உறவுக்காரர்களை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய சிறுவனை காவல்துறை தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தக்ரோகி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சிங். இவரது மனைவி பெயர் சரோஜ். ராஜேந்திர சிங் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். தனது மனைவி மற்றும் மகனுடன் அந்தப் பகுதியில் வசித்து வருகிறார். அவர்களுடன் ராஜேந்திரசிங்கின் சகோதரியும் அவரது மகளும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

ராஜேந்திர சிங் க்கும் அவரது சகோதரிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ராஜேந்திர சிங் இருக்கும் அவரது சகோதரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் படைத்த ராஜேந்திர சிங் சகோதரியின் மகனான சிறுவன் வீட்டிலிருந்து துப்பாக்கி எடுத்து ராஜேந்திர சிங் மற்றும் அவரது மனைவி மகனை சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கும் போது சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. 

மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் செல்லும் வழியில் ராஜேந்திர சிங் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
 இந்த நிலையில் உறவுக்காரர்களை சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடிய சிறுவனை போலீசார் வலை வீசி தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are actively searching for a boy who shot dead his relatives in Uttar Pradesh and ran away


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->