தீ விபத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதம்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற முடிந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உத்திரபிரதேசம் மாநிலம் பெதுல் மாவட்டத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீபத்தில் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்துள்ளது.

நேற்று நடைபெற்ற பெல்து மக்களவைத் தொகுதியில் மொத்தம் 72.65% வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. இந்த உலகத்தில் வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். மேலும் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதாரம் இன்றி மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Polling machine damaged in fire accident in Madhya Pradesh


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->