ஜம்மு காஷ்மீரில் குக்கர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஷோபியான் காவல்துறை மற்றும் ராணுவத்தின் நாற்பத்து நான்கு ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கை முயற்சியில், ஷோபியான் பகுதியில் உள்ள இமாம்சாஹிப்பில் குக்கரில் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த வெடிகுண்டை காவல்துறை மற்றும் நாற்பத்து நான்கு ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர் மிகவும் துரிதமுடன் செயல்பட்டு செயலிழக்க செய்ததால், பெரும் உயிரிழப்பு சதி முறியடிக்கப்பட்டது. 

இந்த மாதம் ஆரம்பத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரம்பன் மாவட்டம் நஷ்ரி நாகா அருகே, ஒரு மினி பேருந்தை இடைமறித்து சோதனை மேற்கொண்டதில், ஒரு மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும், "டிரக் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் ஒட்டும் வகையிலான குண்டுகளின் ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pressure cooker bomb found in jammu kashmeer


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->