சகோதர்களுக்கு மரண தணடனை! 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! ராஜஸ்தானை பதறவைத்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


14 வயது சிறுமியை பாலில் வன்கொடுமை செய்து, கொடூரமாக எரித்து கொலை செய்த வழக்கில், சகோதரர்கள் இருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனது கிராமத்தில் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தார்.

கால்நடை மேய்க்க சென்ற சிறுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் ஆகஸ்ட் 4ஆம் தேதி பாதி எரிந்த நிலையில், அந்த சிறுமியின் உடல் அதே கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் மீட்கப்பட்டுள்ளது.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிருடன் செங்கல் சூலையில் வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், குற்றவாளிகள் தங்களின் அடையாளங்களை அழிக்கும் விதமாக சிறுமியின் உடலை குளத்தில் வீசி சென்றதும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இந்த விசாரணையை தீவிரப்படுத்தி, பெண்கள் உட்பட ஒன்பது பேரை உடன் அதிரடியாக கைது செய்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காலு லால் மற்றும் அவரது சகோதரர் கன்ஹா ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த போக்ஸ் நீதிமன்றம், அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரை விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே 7 பேரின் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan 14 years old girl murder case 2024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->